ஜோதிட சூட்சுமங்கள் - விதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்-செவ்வாயின் சூட்சுமங்கள்- ஜோதிட நுணுக்கங்கள் -ஜோதிட சூட்சுமம்!அஷ்டதிக்கு பாலகர்கள் - காவல் தெய்வங்கள்- பரிவர்த்தன யோகம் -ஜோதிட சூட்சமங்கள் - ராகு, கேது ஜோதிட சூட்சுமம்

 காவல் தெய்வங்கள்- பரிவர்த்தன யோகம் -ஜோதிட சூட்சமங்கள் - ராகு, கேது
ஜோதிட சூட்சுமம்

அஷ்டதிக்கு பாலகர்கள் - காவல் தெய்வங்கள். இவர்கள் முறையே -கிழக்கு திசைக்கு இடி அல்லது கொடி குறியோடு இந்திரனும் -தென்கிழக்கு திசைக்கு புகை குறியோடு அக்னியும் -தெற்கு திசைக்கு சிங்கம் குறியோடு எமனும் -தென்மேற்கு திசைக்கு யாளி அல்லது நாய் குறியோடு நிருதியும் -மேற்கு திசைக்கு காளை குறியோடு வருணனும் - வடமேற்கு திசைக்கு கழுதை குறியோடு வாயுவும் -வடக்கு திசைக்கு யானை அல்லது காகம் குறியோடு குபேரனும் -வடகிழக்கு திசைக்கு மான் குறியோடு ஈசானனும் - காவல் தெய்வங்கள் ஆக ஆள்கிறார்கள் இதன் அடிப்படையில்தான் சிலருக்கு கழுதை படம் சிறப்பை கொடுத்துள்ளது எனவே வீட்டிலோ தொழில்செய்யும் இடத்திலோ உள்ளே நுழையும்போது எந்த திசை தென்படுகிறதோ அந்த திசையின் குறியீடுக்குரிய படம் வைப்பது நலம் தரும்.
பரிவர்த்தன யோகம் அவை 3 விதமானது அவற்றில் ஒன்று மகா யோகம் ஆகும் அது எவ்வாறெனில் 1 க்கு உடையவர் 2 4 5 7 9 10 11 க்கு உரிய அதிபதிகளுடனும் 2 க்கு உடையவர் 1 4 5 7 9 10 11 க்கு உரிய அதிபதிகளுடனும் 4 க்கு உடையவர் 1 2 5 7 9 10 11 க்கு உரிய அதிபதிகளுடனும் 5 க்கு உடையவர் 1 2 4 7 9 10 11 க்கு உரிய அதிபதிகளுடனும் 7 க்கு உடையவர் 1 2 4 5 9 10 11 க்கு உரிய அதிபதிகளுடனும் 9 க்கு உடையவர் 1 2 4 5 7 10 11 க்கு உரிய அதிபதிகளுடனும் 10 க்கு உடையவர் 1 2 4 5 7 9 11 க்கு உரிய அதிபதிகளுடனும் 11 க்கு உடையவர் 1 2 4 5 7 9 10 க்கு உரிய அதிபதிகளுடனும் ஸ்தான பரிவர்த்தனை கொள்வதால் உண்டாகிறது இந்த நிலையால் வலிமை வாய்ந்த , பலமான , வெல்திறமிக்க , தோல்வியற்ற, செல்வாக்குமிக்க , செயல்திறமிக்க , உடல்நல உறுதியுடைய , ஆற்றல் வாய்ந்த , திடமான , உரம் வாய்ந்த , உறுதி வாய்ந்த , கட்டுறுதியான , வளையாத , முறியாத , அபாரம் , பிரமாதம் . வல்லமைமிக்க , உடலாற்றல் சார்ந்த , துணிவாற்றல் வாய்ந்த , திரண்ட , பருத்த , பெரிய ,மிகுதியான , விளக்கம் , மினுமினுப்பு , பெருந்திறமை , பகட்டழகு . விழாக்கொண்டாட்டம் , மகிழ்ச்சியில் திளைத்தல் , பருவகாலச் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் , விழா நாளுக்குரிய பளபளப்பு , ஒளிர்வு ,புறப்பொலிவு , கதிரொளி , அழகொளி , மிகுவனப்பு , பகட்டு , மிகுபுகழ் , மேன்மை , தனிச்சிறப்பு , மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை , ஒளிரும் மேற்புறமுடைய கம்பளம் ஆகிய சிறப்புகள் வந்து சேர்கின்றன [ஆனால் பரிவர்த்தனை பெரும் கிரகங்களில் ஒரு கிரகம் பகையோ நீசமோ அடையுமாயின் நடுத்தரமாகவும் பரிவர்த்தனை பெற்ற இரண்டு கிரகமும் பகை நீசம் அடைந்திருப்பின் இந்த யோகம் இல்லாத நிலையுமாகும்]

கல யோகம்  1 க்கு உடையவர் 3 க்கு உரியவருடனும் 2 க்கு உடையவர் 3 க்கு உரியவருடனும் 3 க்கு உடையவர் 1 2 4 5 7 9 10 11 க்கு உரிய அதிபதிகளுடனும் 4 க்கு உடையவர் 3 க்கு உரியவருடனும் 5 க்கு உடையவர் 3 க்கு உரியவருடனும் 7 க்கு உடையவர் 3 க்கு உரியவருடனும் 9 க்கு உடையவர் 3 க்கு உரியவருடனும் 10 க்கு உடையவர் 3 க்கு உரியவருடனும் 11 க்கு உடையவர் 3 க்கு உரியவருடனும் ஸ்தான பரிவர்த்தனை கொள்வதால் உண்டாகிறது இதன் பலனாக இயற்கை மேனியாக , உருவாக்கப்படாத , செப்பமுறாத , பட்டையிடப்படாத , மெருகிடப்பெறாத , பண்பற்ற , கரடுமுரடான , முரட்டுத்தனமான , கலைநயமற்ற , பக்குவமுறாத , முடிவுறாத , செரிமானமுறாத , மனத்தால் பற்றமுடியாத , ஒழுங்கமைதி . திருந்தாத , தெளிவற்ற , முரடான , பக்குவமற்ற , பதனிடாத செரிமானமாகாத , நன்றாக மனதில் வாங்கிப் பதிய வைக்கப்படாத, இணைப்பில்லாத , தெளிவாய்ப் பேசும் ஆற்றலற்ற , நன்கு ஒலிக்க முடியாத , ஊமையான , குழப்பமான , தெளிவற்ற விளக்கமற்ற , குழப்பமான , மறைந்திருக்கிற , மக்கிய , தனிப்பட்ட தன்மையற்ற , பிரித்தறியக் கூடிய பண்பற்ற, வலிமையற்ற , பளுத்தாங்கும் ஆற்றலில்லாத , எதிர்ப்பாற்றல் குன்றிய , உறுதியற்ற , எளிதில் வளைகிற , எளிதில் உடைகிற , எளிதில் தோல்வியுறக்கூடிய , வலிமையுடன் செயலாற்றாத , மெலிந்த , நோய் எதிர்க்கும் ஆற்றல் குன்றிய , நீராளமான , செறிவு குன்றிய, ஆகிய பலனாகும் [இதில் பரிவர்த்தனை பெரும் இரண்டு கிரகங்களும் பகை நீசம் பெற்றால் முழுமையாகவும் பரிவர்த்தனை பெரும் இரண்டு கிரகங்களில் ஒன்று மட்டும் பகையோ நீசமோ பெற்றிருந்தால் நடுத்தரமாகவும் பரிவர்த்தனை பெற்ற இரண்டு கிரகங்களும் உச்சம் நட்பு பெற்றால் எதிர் மறையாகவும் பலன் தருவதாகும்]
இதில் மூன்றாவது தைன்ய யோகம் ஆகும் இதன் நிலை எவ்வாறெனில் 1 க்கு உடையவர் 6 8 12 க்கு உரிய அதிபதிகளுடனும் 2 க்கு உடையவர் 6 8 12 க்கு உரிய அதிபதிகளுடனும் 3 க்கு உடையவர் 6 8 12 க்கு உரிய அதிபதிகளுடனும் 4 க்கு உடையவர் 6 8 12 அதிபதிகளுடனும் 5 க்கு உடையவர் 6 8 12 அதிபதிகளுடனும் 6 க்கு உடையவர் 1 2 3 4 5 7 8 9 10 11 12 க்கு உரிய அதிபதிகளுடனும் 7 க்கு உடையவர் 6 8 12 க்கு உரிய அதிபதிகளுடனும் 8 க்கு உடையவர் 1 2 3 4 5 6 7 9 10 11 12 க்கு உரிய அதிபதிகளுடனும் 9 க்கு உடையவர் 6 8 12 க்கு உரிய அதிபதிகளுடனும் 10 க்கு உடையவர் 6 8 12 க்கு உரிய அதிபதிகளுடனும் 11 க்கு உடையவர் 6 8 12 க்கு உரிய அதிபதிகளுடனும் 12 க்கு உடையவர் 1 2 3 4 5 6 7 8 9 10 11 க்கு உரிய அதிபதிகளுடனும் ஸ்தான பரிவர்த்தனை கொள்வதால் உண்டாகிறது இதன் பலனாக பொருளாசை மந்தம் , உளச்சோர்வு , மந்தநிலை , பள்ளம் , வியாபாரத் தேக்கம் , மனச்சோர்வு , மனச்சிதைவு , மனப்பதட்டம் , கஞ்சத்தனம் , கயமை , ஏழ்மை , பஞ்சம் , பற்றாக்குறை , குறைபாடு , இனப்பொதுப்பண்பு குறைபாட்டு நிலை , சிறுமை , அற்பத்தனம், துயர்மிகுந்த , மகிழ்ச்சியற்ற , அவப்பேறான , இரங்கத்தக்க , வெறுக்கத்தக்க , தாழ்வான , இழிவான , துக்ககரமான , பரிதாபத்துக்குரிய , நோய் , பெருந்துன்பம் , விபத்து , மகிழ்ச்சியற்ற , அதிர்ஷ்டமற்ற , இழிந்த , மனக்குறையுண்டாக்குகிற ,குழப்பம் ஆகிய பலனாகும் [ இதில் பரிவர்த்தனை பெரும் இரண்டு கிரகங்களும் பகை நீசம் பெற்றால் முழுமையாகவும் பரிவர்த்தனை பெரும் இரண்டு கிரகங்களில் ஒன்று மட்டும் பகையோ நீசமோ பெற்றிருந்தால் நடுத்தரமாகவும் பரிவர்த்தனை பெற்ற இரண்டு கிரகங்களும் உச்சம் நட்பு பெற்றால் எதிர் மறையாகவும் பலன் தருவதாகும் ]
ராகு கேது முந்தைய காலங்களில் அதிகமான மக்கள் விஷ ஜந்துக்களிடம் கடிபட்டு மாண்டு போயுள்ளனர் இதன் காரணமாகவே அன்றைய காலகட்டத்தில் ராகு கேது இவர்களின் நிலையை வைத்து சர்ப்பத்தினால் கண்டம் எதுவும் நேரிடுமா என அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு எச்சரிக்கையை கடைப்பிடித்து வாழ்ந்தவர்களும் உள்ளனர் ஆனால் இன்றைய காலத்தில் நாகரீக வளர்ச்சியில் விஷ ஜந்துக்களிடம் கடிபடுவதை மனிதன் வெகுவாக தவிர்த்து விட்டான் அப்படியானால் ராகு கேது இவர்களால் உண்டாகும் சர்ப்பத்தினால் உண்டாகும் கண்டம் மறைந்துவிட்டதா என்றால் மறையவில்லை அது எவ்வாறெனில் முன்னர் ஜந்துக்கள் மூலம் நேரடியாக மனிதனுக்கு வந்து சேர்ந்த விஷம் தற்போது உடல் நலம்காக்கும்மருந்து மாத்திரைகள் மூலம் மனிதனை வந்து சேர்கிறது எனவே ராகு கேது பகை நீசம் பெற்று 1 6 8 க்கு உரியவர்களை பார்த்தாலும் 6 8 ஆமிடத்தை பார்த்தாலும் இந்த கண்டம் ஜாதகருக்கு உண்டு (இதில் முழுப்பார்வையான 7 ஆம் பார்வைக்கே இப்பலன்) எனவே இத்தகைய அமைப்பை பெற்றவர்கள் மருத்துவரை நாடாமல் சுய வைத்தியம் எனும் பெயரில் மருந்துகளை உட்கொள்வதும் நோய் தீர்ந்த பின்னரும் அதை உணராமல் மீண்டும் மருந்துகளை நாடுவதை தவிர்த்தல் நன்று மேற்கூறிய நிலைகளில் பார்க்கும் கிரகமான ராகுவோ கேதுவோ நட்பு உச்சம் பெற்றால் இந்த கண்டம் உண்டாவதில்லை.
மூலம்ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம்நிர்மூலம் என நம் ஜோதிட சாஸ்திரத்தில் வழங்கப்பட்டுள்ளது இந்தக் கருத்தை நம்மில் அநேகர் பாலின பாகுபாட்டில் கூறப்பட்டுள்ளதாக எண்ணிக்கொண்டு மூலநட்சத்திரத்தில் ஆண் பிறந்தால் அரசாளும் என்றும் பெண் பிறந்தால் நிர்மூலம் ஆகும் என்றும் பலன் கூறுகின்றனர் ஆனால் அக்கருத்து பாலினம் குறித்து கூறப்பட்டுள்ளதாக எண்ணுவது தவறு ஏனெனில் ஆண் பெண் பாகுபாட்டில் யோகங்கள் கிடையாது பின் எவ்வாறு இக்கருத்து கூறப்பட்டு உள்ளதெனில் எல்லா நட்சத்திரத்திலும் ஆண்பாதம் பெண்பாதம் என வரும் அவ்வாறு மூலநட்சத்திரத்தில் ஆண்பாதங்களை ஆண்மூலம் எனவும் பெண்பாதங்களை பெண்மூலம் எனவும் கூறியுள்ளனர் சரி இதில் இந்த யோகம் எவ்வாறு நடக்கும் என்றால் மூலநட்சத்திரத்தில் பிறந்தவர் ராசி தனுசு ஆகும் இந்த ராசிக்கு 8 க்கு உடையவர் ஆகிறார் சந்திரன் அவர் ஆண்பாதமான மூலம் 1ல் 3ல் இருக்கும்போது அம்சத்தில் அவர் ராசியில் தான் நின்ற தனுசுக்கு 5ல் மேசத்திலும் 7ல் மிதுனத்திலும் என நல்ல நிலையில் இருப்பார் அதே சந்திரன் தனுசில் பெண்பாதமான மூலம் 2ல் 4ல் இருக்கும்போது ராசியில் அவர் நின்ற தனுசுக்கு 6ல் ரிசபத்திலும் 8ல் கடகத்திலும் என சாதகமற்ற நிலையில் இருப்பது மட்டுமின்றி உச்சமாகவும் ஆட்சியாகவும் இருப்பார் இதே போல்தான் மகத்தில் பிறந்த மங்கை ஜகத்தை ஆள்வார் இது கூட ஆதியில் மகத்தில் மங்கைஜகத்தை ஆள்வார் என்றே கூறியிருப்பர் இதுவும் ஆண் பெண் என பாலின பாகுபாட்டில் கூறப்பட்ட கருத்தல்ல இதில் யோகம் வழங்கும் நிலையை எவ்வாறு கணித்து உள்ளனர் என்றால் மகத்தில் பிறந்தவர் ராசி சிம்மம் ஆகும் இந்த ராசிக்கு 12 க்கு உடையவர் ஆகிறார் சந்திரன் அவர் ஆண்பாதமான மகம் 1ல் 3ல் இருக்கும்போது அம்சத்தில் அவர் ராசியில் தான் நின்ற சிம்மத்துக்கு 9ல் மேசத்திலும் 11ல் மிதுனத்திலும் இருப்பார் அதே சந்திரன் பெண்பாதமான 2ல் 4ல் இருக்கும்போது ராசியில் அவர் நின்ற சிம்மத்துக்கு 10ல் ரிசபத்திலும் 12ல் கடகத்திலும் இருப்பார் இதில் இரண்டுமே ஒரே அளவில் பலம் பெற்றபடியால் பெண்பாதத்தில் நிற்கும்போது அம்சத்தில் உச்சமாகவும் ஆட்சியாகவும் வருவதை யோக நிலையாக கொண்டனர் இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஏன் சந்திரன் மட்டுமே பார்க்கப்பட்டு உள்ளதெனில் கேது நட்சத்திரத்தில் பிறந்தால் ஜாதகரின் 26 வயதிலிருந்து 33 வயதுக்குள் சந்திரதிசை துவங்கி 10 ஆண்டுகள் நடைபெறும் இந்த வயதுதான் ஒரு மனிதனின் பிற்கால வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது அதுபோக மற்ற கிரகங்களை அம்சத்தில் இந்த நிலையில் கணித்திட இயலாது எனவே சந்திரனை வைத்தே குறித்துள்ளனர் கேது நட்சத்திரமாகிய அஸ்வினிக்கு ஒன்றும் கூறப்படவில்லை ஏனெனில் அஸ்வினி நட்சத்திரம் இடம்பெறும் மேஷராசிக்கு சந்திரன் 4 க்கு உடையவர் ஆகிறார் அரசாளும் யோகம்ஜகத்தைஆளும் யோகம் போன்ற யோகங்கள் 8 ஆம் இடம் 12 ஆம் இடங்களில் உள்ளன என்பதை இதன் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்
விபரீத ராஜயோகம் 6 8 12 ஆம் இடங்களை மறைவு ஸ்தானம் என்றும் துர்ஸ்தானம் என்றும் சிறப்பற்றதாக கருதுகிறோம் ஆனால் ஆதிகாலத்தில் இந்த இடங்கள் மறைவான யோக ஸ்தானம் என்று இருந்திருக்கக்கூடும் அது எவ்வாறெனில் யோகங்களில் இரு நிலை உள்ளன ஒன்று வரம்புக்கு உட்பட்டதாகவும் நம்பும் வகையிலும் அமைகிறது மற்றொன்றோ வரம்புக்கு மீறியதாகவும் நம்ப முடியாத வகையிலும் அமைகிறது இந்த இரண்டாவது யோகம் தான் விபரீத ராஜயோகம் என கூறப்படுகிறது 6 8 12 க்கு உடையவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ராசியில் அமர்ந்தாலோ அல்லது ஒருவரையொருவர் 7 ஆம்பார்வையாக மட்டும் பார்துக்கொண்டாலோ அல்லது ஒருவர் பாதசாரத்தில் மற்றவர் நின்றாலோ இந்த யோகம் முழுமையாக அமைகிறது அதே போல் 6 8 12 ஆம் இடங்கள் மூன்றும் இக்கிரகங்களால் இணைக்கப்பட்டாலும் இந்த யோகம் அமைகிறது இதில் 8 க்கு உரியவர் மட்டும் தனித்தே இந்த யோகத்தை வழங்கும் நிலை உண்டு அது எவ்வாறெனில் 8 க்கு உரியவர் 6 ல் நின்றால் அவர் 12 ஆம் இடத்தை 7 ஆம் பார்வையாக பார்ப்பதால் இந்த மூன்று இடங்களும் இணைக்கப்படுகின்றன இதே போல் 8 க்கு உரியவர் 12 ல் நிற்கும்போதும் இந்த யோகம் முழுமையாக அமைகிறது மூன்றில் இரு கிரகங்களோ அல்லது இரு இடங்களோ இணைக்கப்பட்டாலும் அல்லது இவர்களில் ஒருவர் மட்டும் ஆட்சியானாலும் இந்த யோகம் 80 சதவீதம் உண்டாகிறது இந்த யோகம் பல்வேறு பிரபலமானவர்கள் ஜாதகங்களிலும் நம் கடவுள்களின் ஜாதகங்களிலும் அமைந்துள்ளது எனவே 6 8 12 ஆம் இடங்களை நாம் சரியான கோணத்தில் காண்பது நன்று
யார் உயர்ந்த நிலை கிரகங்கள் எப்போதுமே பார்க்கும் இடத்திற்கே பலனை அளிக்ககூடியதாக தோன்றுகின்றன அது எவ்வாறெனில் ஒரு ஜாகத்தில் 9 க்கு உடையவன் 9 ல் ஆட்சி பெற்று 3 ஆம் இடத்தில் கிரகங்கள் எதுவும் இல்லாதநிலையில் அந்த ஜாதகரைவிட அவரது சகோதரரே உயர்ந்த நிலையை அடைகிறார் ஜாதகரும் வீரியம் மிக்கவராகிறார் இதுபோல்தான் 3 க்கு உடையவன் 3 ல் ஆட்சி பெற்று 9 ஆம் இடத்தில் கிரகங்கள் எதுவும் இல்லாதநிலையில் ஜாதகரே உயர்ந்த நிலையை அடையும் பாக்கியவான் ஆகிறார்.
10ல் சுபக் கிரகம் இருக்கலாமா? பத்துல ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது இங்கே சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை அதாவது பத்தில் சுபக்கிரகம் ஏறும் பட்சத்தில் அது நாலாம் இடமான சுக ஸ்தானத்தை பார்க்கக்கூடியதாகிறது நாலாமிடத்தை சுபக்கிரகம் நோக்குவதால் சுகவாசி ஆகிறான் அவனிடம் கடின உழைப்பு இருப்பதில்லை ஆகவேதான் பத்தில் அவசியம் பாவக்கிரகம் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் பத்துல ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என கூறியுள்ளனர் ஒருவேளை பத்தில் சுபக்கிரகம் இருந்திடும் பட்சத்தில் நாலாமிடத்திலும் சுபக்கிரகம் இடம் பெறும்போதுதான் இந்நிலை மாறுகிறது
விதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்

வளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் இருக்கலாம் மன ரீதியாகவும் இருக்கலாம். பொதுவாக விதி என்பதை நம்மால் மாற்றமுடியாதது என்ற பொருளில் இதுவரை நாம் பயன்படுத்தி வருகிறோம். மதி என்பது நாம் சிந்திக்கும் மனம் என்ற பொருளிலும், கதி என்பது இறுதி வாழ்க்கை நிலை என்ற பொருளிலும் கையாளப்படுகிறது. விதி என்பது நம்முன்ஜென்ம வினைகளின் பலன். மதி என்பதுஇப்பிறவிகதி என்பது நாம் சென்றடையும் இடம். இந்த நிலையில் ஜோதிடம் இதனை எவ்வாறு எடுத்துக் கூறுகிறது என்பதனைப் பார்க்கலாம்.

விதி என்பது இலக்கினம். (ஜெனன ஜாதகம்) நாம் பிறந்த நேரத்தில் வான் மண்டலத்தில் சூரியன் உதிக்கும் ராசியே நமது இலக்கினம். இந்த சனப் பொழுதில் வான் மன்டலத்தில் உள்ள கிரகங்களை ஒரு ஒழுங்கு வடிவமைப்பில் எழுதும் போது கிடைப்பது தான் ஜாதகம். இவ்வுலகிற்கு நாம் கொண்டுவருவது தான் ஜாதகம். ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் ஒருவகை காந்த சக்தி புவியை வந்தடைகிறது. அந்த காந்த சக்தியை முதலில் உணரும் அந்த நேரம் தான் நம்முடைய ஜனனமாகிறது. நவகோள்களில் இருந்து வரும் இந்த காந்த சக்தி நம்முடைய உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்தும் பாதிப்பு தான் நம்முடைய வாழ்க்கை முறை. இந்த முறையில் நமக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போக்கை காட்டக்கூடிய கண்ணாடி தான் ஜாதகம். அதற்கு முக்கியம் இலக்கினம். அதனால் அதனை விதி என்கிறோம்.

மதி என்பது நட்சத்திரங்கள் (திசா புத்தி அந்தரங்கள்). நாம் வசிக்கும் இப்புவியின் துணைக்கோள் சந்திரன். மிக மிக அருகில் இருக்கும் இந்தக் கோள் தான் நம்முடைய மனதை ஆள்கிறது. நாம் எவ்வாறு எண்ணுகிறோமோ அவ்வாறே நாம் வாழ்கிறோம் என்பது தான் உண்மை. அப்படி இப்பிறவியில் நாம் வாழும் நிலைதான் இந்த சந்திரன் என்படும் மதி. மனம் என்பது நிலையில்லாதது காரணம் சந்திரனிலிருந்து வரும் காந்த அலைகள் தினம் தினம் கூடுவதும் குறைவதுமாக இருப்பது தான். நாம் பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திர சாரத்தில் பயணிக்கிறதோ அது தான் நம்முடைய ஜனன நட்சத்திரம். இதன் மூலம் தான் திசா புத்தி அந்தரம் என்பது கணக்கிடப்பட்டு காலச் சக்கரத்தின் போக்கு வகைப்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தின் சாரம் வாங்கியுள்ளதோ அந்த நட்சத்திரஅதிபதிகளின் பிரதிபலிப்பு தான் ஜோதிடம் கூறும் பலன்கள்.

கதி என்பது கோச்சாரம். இன்றைய கிரக சூழ்நிலைகள். இன்றைய பொழுதில் கிரகங்களில் இருந்து வரும் காந்த அலைகள் நம்மிடம் பிறக்கும் போது வந்து சேர்ந்த காந்த அலைகளிடம் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் கோச்சார பலன்கள். இப்படி நம்மைச் சேர்ந்த காந்த அலைகளின் போக்கு தான் நாம் இறுதியில் போய்ச் சேரும் இடம். இது தான் கதி என்பது.


பொதுவாக ஜோதிடத்தில் விதி, மதி, கதி என்பது எப்பொருளில் எடுத்துக் கொள்ளப்பட்டுவருகிறது என்றால்?  விதி என்பது இலக்கினம். மதி என்பது சந்திரன் நிற்கும் ராசி. கதி என்பது சூரியன் நிற்கும் ராசி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இலக்கினம் சந்திரன் சூரியன் இம்மூன்றில் எது வலுவாக இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் பலன்கள் நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஜனன ஜாதகம், திசாபுத்தி அந்தரம், கோச்சாரம் இந்த நிலைதான் விதி மதி கதி என்பதாக எடுத்துக்கொண்டோமானால், ஜனன ஜாதகம் நடக்க இருக்கும் வினை என்ன என்று காட்டும். திசா புத்தி அந்தரங்கள் அந்த வினை எப்பொழுது என்று காட்டும். கோச்சாரம் அவ்வினையால் நாம் அடையும் திருப்தியைக் காட்டும்.
செவ்வாயின் சூட்சுமங்கள்
செவ்வாயின் முக்கியமான காரகத்துவங்களில் ஒன்றாகச் சொல்லப்படுவது வீரம்.
இந்த வீரத்தை நாம் காலத்திற்கு ஏற்ப இரண்டு பிரிவாக பிரிக்க முடியும். ஜோதிட விதிகள் வகுக்கப்பட்ட சட்டம், ஒழுங்கு இல்லாத தனிமனிதனுக்கு பாதுகாப்பற்ற அந்தக்காலத்தில் ஒருவர் தன்னையோ, தன்னைச் சார்ந்தவரையோ அல்லது தனது இனத்தையோ பாதுகாக்கும் பொருட்டு ஒருவரை அல்லது ஒரு குழுவை ஆயுதங்களால் வெட்டுவது முரட்டுத்தனமாக அழிப்பது கொல்வது வீரம் எனப்பட்டது.
ஆனால் சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறும் இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் தன்னைப் பாதுகாப்பதன் பொருட்டுக் கூட இன்னொருவரை ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால், அழித்தால் அது வீரம் எனப்படுவதற்கு பதிலாக குற்றம் எனப்படும்.
ஜாதகத்தில் செவ்வாய் நேரடியாக வலுப்பெற்றால் ஜாதகர் அசட்டுத் துணிச்சல் உள்ளவராகவும் முன்கோபக்காரராகவும் இருப்பார். மூர்க்கத்தனம் அவரின் பிறவிக் குணமாக இருக்கும்.
வலுப்பெற்ற செவ்வாய் கிரிமினல் தனத்தை உருவாக்கி தைரியமாகக் குற்றங்களைச் செய்ய வைப்பார், ரவுடி ஆக்குவார். ஜாதகருக்கு அடிப்பதிலும், தண்டிப்பதிலும் ஆர்வம் இருக்குமாதலால் காவல்துறை அல்லது ராணுவத்தில் பணி புரிய வைப்பார்
மூலநூல்கள் செவ்வாய் வலுப்பெற்றவனை மாபெரும் வீரன், யுத்தத்தில் ஆயிரம் தலைகளைக் கொய்பவன், சேனாதிபதி, மஹாதைரியசாலி, பூமியை வெல்பவன் என்றுதான் புகழ்கின்றனவே தவிர இவன் நல்லவன், இளகிய மனம் படைத்தவன் கருணை வடிவானவன், மகாகோடீஸ்வரன், அரண்மனையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவன், வேகமாகச் செல்லும் ரதங்களில் கட்டிளம் மங்கையரை அருகில் வைத்துக் கொண்டு இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பவன் என்றோ, அல்லது வேதாந்தம் பேசிக்கொண்டு கடவுளுக்கு அருகிலேயே இருந்து அவருக்கு சேவை செய்து அவரின் திருவடிகளைப் போற்றும் அவ்வுலக இன்பத்தை அனுபவிப்பவனாகவோ ஒரு போதும் குறிப்பிடவில்லை.
செவ்வாய் எந்த ஒரு ஜாதகத்திலும் நேரடியாக வலுப்பெறக்கூடாது அப்படி வலுப்பெற்றால் அந்த நபர் வீரம் என்றபெயரில் குற்றங்களைச் செய்வார். நேரிடையாக வலுப்பெறாமல் சூட்சும வலுப்பெற்றால் மட்டுமே குற்றங்களைச் செய்யமாட்டார்.
பாபக்கிரகம் என்றால் என்ன? அது ஏன் பாபக்கிரகமாக்கப்பட்டது?
உலகில் உள்ள அனைத்துமே இரு வேறு எதிர்நிலைகளைக் கொண்ட மாறுபாடான சமன்பாடுகள்தான். வேறுவேறு எதிரெதிர் நிலைகள் இல்லையெனில் உலகில் எவையுமே இல்லை. இரவு-பகல், ஆண்-பெண், நன்மை-தீமை, இன்பம்-துன்பம் போன்றவைகள் இதில் அடக்கம்.
இருட்டு இருந்தால்தானே அங்கு வெளிச்சத்திற்கு வேலை…?
உலகில் எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால், எல்லாமே சுபமாக இருந்து விட்டால் உலகில் பிரச்னைகளே இல்லையே…
அதைப்போலத்தான் நவக்கிரகங்களிலும் நல்ல கிரகம் கெட்டகிரகம் என்ற ரீதியில் சுபர், பாபர் என இரு பிரிவுகளை ஞானிகள் நமக்கு வேறுபடுத்திச் சொன்னார்கள்.
சுபர்கள், பாபர்கள் என்ற பிரிவுகளும், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச்சந்திரன், செவ்வாய், சனி என சுப, அசுப வரிசைகளும் ஞானிகளால் அமைக்கப்பட்டன
மனிதன் உருவாகத் தேவையான ஆத்மஒளியை, அவனை வழி நடத்தத் தேவையான குறிப்பிட்டவகை கதிர்வீச்சை சூரியனிடமிருந்து வாங்கி சரியான விகிதத்தில் பூமியின் மேல் செலுத்தி மனிதனிடம் நல்ல தாக்கத்தை உண்டு பண்ணும் கிரகங்கள் குரு, சுக்கிரன் போன்ற சுபர்கள்.
சூரியனிடமிருந்து பெறும் ஒளியை வைத்தே, அதைப் பிரதிபலிக்கும் அளவை வைத்தே சுப அசுப பிரிவுகள் நமது ஞானிகளால் அமைக்கப்பட்டன.அவ்வகையில் சூரியனின் ஆத்ம ஒளியைப் பெற முடியாத தூரத்தில் இருக்கும் சனி முதன்மைப் பாபராகவும், தேவையற்ற சிகப்புக் கதிர்களை அதிகமாக பிரதிபலிக்கும் செவ்வாய் இரண்டாவது பாபராகவும் சொல்லப்பட்டன.
அதிர்ஷ்டம் எனக் கருதப்படும் யோகங்களை முறையான வழியில் அளிப்பவைகள் சுபக்கிரகங்கள் மட்டும்தான். சுபர்களால் கிடைக்கும் யோகங்களை மட்டுமே நீங்கள் வெளியே கௌரவமாக சொல்லிக் கொள்ள முடியும். பயமின்றி தக்க வைத்துக்கொள்ளவும் முடியும்.
அதே போல ஒரு பாபக்கிரகம் எப்போது புனிதப்படுகிறது என்பதை, அதாவது மனிதனுக்கு தேவையானவைகளை செய்யக் கூடிய தகுதிகளைப் பெறுகிறது என்பதையும் நமது ஞானிகள் சில நிலைகளில் வரையறுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில சூட்சுமங்களை நமக்குக் கோடிட்டும் காட்டியிருக்கிறார்கள்.
ராஜயோகம் உடைய ஜாதகம் ஆயினும் அவன் பிறந்த குலத்தைக் கணக்கில் கொண்டே அவனுக்குப் பலன் சொல்ல வேண்டும் என்றொரு சுலோகம் சொல்கிறது.
மன்னராட்சி முறை இருந்த அந்தக் காலத்தில் ஒரு குடியானவனுக்கு நாடாளும் அமைப்பு எனப்படும் அரசயோகம் இருந்தாலும் அவன் அரசனாவன் என்று சொல்லப்படவில்லை. அரச குலத்தைச் சேர்ந்தவனுக்கு மட்டுமே ராஜாவாகும் யோகம் இருப்பதாக குலத்தின் அடிப்படையில் பலன் சொல்லப்பட்டது. அது சரியாகவும் இருந்தது,
சாமான்யனும் முதல்வர் ஆகலாம் பிரதமர் ஆகலாம் என்ற ஜனநாயக முறை வந்துவிட்ட இந்தக் காலத்தில் ராஜயோக ஜாதகமுடைய அமைப்பில் பிறந்த ஒருவருக்கு நீ முதல் மந்திரியாக முடியாது பிரதமர் பதவி உனக்கு கிடைக்காது என்று நாம் பலன் சொல்ல முடியுமா? எனவே ஜோதிட விதிகளும் காலமாற்றத்திற்கு உட்பட்டவைதான் என்பது உறுதி.
அதே நேரத்தில் ஜோதிடத்தின் அடிப்படை விதிகள் மாற்ற முடியாதவை என்பதோடு மாறவும் மாறாதவை. ரிஷிகள் சொன்னதை மீறி பத்தாவதாக ஒரு கிரகத்தையும் பதிமூன்றாவதாக ஒரு ராசியையும் ஜோதிடத்தின் உள்ளே நுழைத்து விட முடியாது.

ரோக ஸ்தானம் சூட்சுமங்கள்
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

சூரியன்:மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை.

சந்திரன்: மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் போன்றவை.

செவ்வாய்: மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள்.

புதன்: இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.

குரு: தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை.

சுக்கிரன்: கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் போன்றவை.

சனி: மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை.

ராகு: அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை

கேது: புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை.

ஜாதகம் பார்க்கும்போதுஜோதிடர்கள்இவற்றையெல்லாம்ஆராய்ச்சிசெய்ய வேண்டும் 
1.லக்னம் சரம்,ஸ்திரம்,உபயம்
2.நட்சத்திரம் பாதம்,-பாகை-கலை -விகலை
3.ராசி சரம்,ஸ்திரம்,உபயம்
4.நாளும் ஓரையும்
5.ஓரையும் கெள்ரியும்
6.திதியின் இருவகை (வளர்பிறை -தேய்பிறை )
7.யோகத்தின் 27 விபரம்
8.அயன விபரங்கள்
9.கரணத்தின் பலாபலன்
10.லக்னத்தில் இருப்பவர்
11.லக்னத்தை பார்த்தவர்
12.லக்னாதிபதி நின்ற ஸ்தானம்
13.லக்னாதிபதி பார்த்த ஸ்தானம்
14.லக்னாதிபதியுடன் சேர்ந்தவர்
15.லக்னாதிபதியை பார்த்தவர்கள்
16.லக்கின சாரம்
17.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம்
18.லக்கின சுபர் -பாபர்
19.லக்கின யோகர்-மாரகர்
20.ராசிக்கு சுபர் -பாபர்-யோகர்-மாரகர்கள்
21.ஒரே ராசி ஒரே லக்கினத்தில் பிறந்திருந்தால்..?
22.திசை புத்திக்கு போதக ,வேதக,பாசககாரர்கள்,நட்சத்திர சாரங்கள்
23.திசாநாதனுக்கு புத்திநாதன் எங்கே..?
24.திசாநாதனை பார்த்தவர்கள்
25.திசாநாதனை சேர்ந்தவர்கள்
26.திசாநாதன் நின்ற இடம்
27.திசாநாதன் பார்த்த இடம்
28.புத்தி நாதன் நின்ற இடம்
29.புத்தி நாதன் பார்த்த இடம்
30.திசாநாதனை எந்த கிரகமும் பார்க்க வில்லை எனில்..? என்ன பலன்..?
31.புத்திநாதனை எந்த கிரகமும் பார்க்காத போது..?
32.திசாநாதனை கிரகங்கள் சேராதபோது..?
33.புத்தி நாதனுடன் எந்த கிரகமும் சேரவில்லை எனில்..?
34.ராகுபகவானின் நிலைபாடுகள்
35.கேதுவின் நிலை
36.பருவகால விபரங்கள்
37.முக்குண வேளைகள் ஏழுவித ஹோரைகள்-திதி சூனியம் விபரம்
38.பஞ்சவித ஸ்தானம்
திரிகோணம் -1,5,9
கேந்திரம் -1,4,7,10
உபஜெயம் -3,6,10,11
அபோலிகம் -3,6,9,12
பணபரம் -2,5,8,11
39.வருஷாதிபன்
40.மாதாதிபன்
41.வாராதிபதின்
42.ஹோராதிபன்
43.அந்த்ராதிபன்
44.தினகால திரிபாகாதிபன்
45.ஆகுல தோஷம்
46.கிரகண தோசம்-சூரிய கிரகணம்
47.கிரகண தோசம்-சந்திர கிரகணம்
48.லக்ன தியாஷ்யம்
49.வார தியாஷ்யம்
50.திதி தியாஷ்யம்
51.நட்சத்திர தியாஷ்யம்

ஜோதிட சூட்சுமங்கள் - விதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்-செவ்வாயின் சூட்சுமங்கள்- ஜோதிட நுணுக்கங்கள் -ஜோதிட சூட்சுமம்!அஷ்டாிக்கு பாலகர்கள்